TNPSC Thervupettagam

ஐந்தாவது தேசிய இசைவு வழங்கலுக்கான நேர மதிப்பீட்டு ஆய்வு (NTRS)

June 24 , 2025 2 days 30 0
  • மத்திய அரசானது, ஐந்தாவது தேசிய இசைவு வழங்கலுக்கான நேர மதிப்பீட்டு ஆய்வு அறிக்கையினை (NTRS) வெளியிட்டுள்ளது.
  • இசைவு வழங்கலுக்கான நேர மதிப்பீட்டு ஆய்வு (TRS) ஆனது, அனுமதி வழங்கீட்டுச் செயல்முறையின் செயல்திறனை மதிப்பிடுவதற்காக சரக்குப் பொருள்களுக்கான ஒரு இசைவு வழங்கலுக்கு எடுக்கும் நேரத்தை அளவிடுகிறது.
  • இது துறைமுகங்கள், விமானச் சரக்கு வளாகங்கள் (ACC), உள்நாட்டுக் கொள்கலன் கிடங்குகள் (ICD) மற்றும் ஒருங்கிணைந்தச் சோதனைச் சாவடிகள் (ICP) ஆகியவற்றில் எடுக்கும் நேரத்தைப் பகுப்பாய்வு செய்கிறது.
  • இறக்குமதிகளில் சராசரி அனுமதி வழங்கீட்டு நேரம் (ART) 2023 மற்றும் 2025 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் துறைமுகங்களில் (~6 மணிநேரம்), ACC வளாகங்களில் (~5 மணிநேரம்) மற்றும் ICP சாவடிகளில் (~18 மணிநேரம்) குறைந்துள்ளது.
  • ஆனால் ஒருங்கிணைந்த சோதனைச் சாவடிகளில் ~12 மணி நேர அதிகரிப்பு பதிவாகி உள்ளது.
  • ICP சாவடிகளில், 93.33% இறக்குமதிச் சரக்குகளானது 48 மணி நேர NTFAP 3.0 இலக்கை எட்டியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்