எஸ்டோனியா, லிதுவேனியா, லாட்வியா மற்றும் போலந்து ஆகியவற்றிற்குப் பிறகு ஒட்டாவா கண்ணிவெடி தடுப்பு ஒப்பந்தத்திலிருந்து வெளியேறும் 5வது ஐரோப்பிய நாடாக பின்லாந்து மாறுகிறது.
பின்லாந்து நாடானது 2012 ஆம் ஆண்டில் ஒட்டாவா ஒப்பந்தத்தில் இணைந்தது.
இந்த ஒட்டாவா ஒப்பந்தம் ஆனது, 1997 ஆம் ஆண்டில் கையெழுத்திடப்பட்டு 1999 ஆம் ஆண்டில் நடைமுறைக்கு வந்தது.
மனிதர்களுக்கு எதிரான கண்ணிவெடிகள் தடை உடன்படிக்கை (ஒட்டாவா ஒப்பந்தம்) ஆனது, மனிதர்களுக்கு எதிரான கண்ணிவெடிகளின் பயன்பாடு, இருப்பு, உற்பத்தி மற்றும் பரிமாற்றத்தைத் தடை செய்கிறது.
தற்போது இது 164 ஒப்பந்ததாரர் நாடுகளைக் கொண்டுள்ளது.