January 21 , 2026
10 hrs 0 min
29
- இடஒதுக்கீடு செய்யப்படாத (பொது) பிரிவு இடங்கள் தகுதியின் அடிப்படையில் அனைத்து தேர்வர்களுக்கும் பொருந்தும் என்று இந்திய உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
- பொதுத் தரநிலைகளில் தகுதி பெறும் SC, ST மற்றும் OBC தேர்வர்கள் இட ஒதுக்கீடு செய்யப்படாத இடங்களில் கணக்கிடப்பட வேண்டும்.
- இட ஒதுக்கீடு செய்யப்படாத இடங்கள் தகுதி அடிப்படையிலான வகையாகும் என்றும், பொதுப் பிரிவிற்கான தனி ஒதுக்கீடு அல்ல என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியது.
- தகுதியால் மேற்கொள்ளப்பட்ட மாற்றம் (இட ஒதுக்கீட்டுச் சலுகைகளைப் பெறாமல் தேர்வு) என்ற கருத்தை தீர்ப்பு விளக்கியது.
- 2013 ஆம் ஆண்டு இந்திய விமான நிலைய ஆணைய (AAI) ஆட்சேர்ப்பு வழக்கில் இருந்து இந்த தீர்ப்பு வந்தது.
- இந்த முடிவு அரசியலமைப்பின் 14 மற்றும் 16 ஆகிய சரத்துக்களின் (சமத்துவம் மற்றும் சம வாய்ப்பு) அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது.
Post Views:
29