'ஒரு மூலிகை, ஒரு தரநிலை' முன்னெடுப்பிற்கான நீட்டிப்பு
August 15 , 2026 3 days 47 0
ஆயுஷ் அமைச்சகமும், சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகமும் (MoHFW) ‘ஒரு மூலிகை, ஒரு தரம்’ (One Herb, One Standard) முன்னெடுப்பை மேலும் மூன்று ஆண்டுகளுக்கு நீட்டித்துள்ளன.
இந்த முன்னெடுப்பானது ஆயுர்வேதம், சித்த மருத்துவம், சோவா-ரிக்பா, யுனானி மற்றும் ஹோமியோபதி ஆகியவற்றில் பயன்படுத்தப்படும் மருத்துவத் தாவரங்களுக்கான பொதுவான அறிவியல் தரங்களை நிறுவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதிக்கான மருந்தக ஆணையம் (PCIM&H) மற்றும் இந்திய மருந்தக ஆணையம் (IPC) ஆகியவை தங்களது புரிந்துணர்வு ஒப்பந்தத்தை (MoU) மூன்று ஆண்டுகளுக்குப் புதுப்பித்துள்ளன.
2022 ஆம் ஆண்டு புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் தொடங்கப்பட்ட முதல் கட்டத்தில், இந்த இரு நிறுவனங்களும் மருத்துவத் தாவரங்கள் குறித்து 50 தனிவரைவு நூல்களை உருவாக்கின.
பாரம்பரிய மருந்துகளின் நம்பகத்தன்மை மற்றும் உலகளாவிய ஏற்புத்தன்மையை மேம்படுத்தும் வகையில், தரப்படுத்தலை விரிவுபடுத்தவும், சர்வதேச தரத் தேவைகளுடன் இந்தியத் தரங்களை சீரமைக்கவும் இந்தப் புதுப்பிக்கப்பட்ட முன்னெடுப்பு உதவும்.