TNPSC Thervupettagam

ஒருங்கிணைந்த உள்நாட்டு எரிசக்தி அமைப்புகள்

March 7 , 2020 1917 days 625 0
  • ஒருங்கிணைந்த உள்நாட்டு எரிசக்தி அமைப்புகள் குறித்த இந்தியா - ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றின் முதன்மைத் திட்டமானது 2020 இந்தியத் திறன்மிகு பயன்பாட்டு வாரத்தில் அறிவிக்கப்பட்டது.
  • இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இடையிலான இந்த கூட்டுப் பங்களிப்பானது தூய்மையான எரிசக்தி மற்றும் காலநிலைக்கு உதவ இருக்கின்றது.
  • இது எரிசக்தி ஆராய்ச்சி மற்றும் புத்தாக்கங்களில், முக்கியமாக புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மற்றும் ஆற்றல் அமைப்பில் அதன் ஒருங்கிணைப்பு ஆகியவற்றில் ஒத்துழைப்பை மேம்படுத்துகின்றது.
  • இந்த ஒத்துழைப்பானது எரிசக்தி விநியோகத்தை தூய்மையானதாகவும் திறன்மிக்கதாகவும் அனைவருக்கும் குறைந்த விலையிலும் வழங்க வழிவகை செய்கின்றது.

இந்தியா - சுவீடன் ஒத்துழைப்பு

  • இந்தியத் திறன்மிகு பயன்பாட்டு வாரத்தில் இந்தியா - சுவீடன் கூட்டு தொழில்துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு திட்டத்தை ஸ்வீடன் மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் கூட்டாக அறிவித்துள்ளன.
  • இந்தக் கூட்டுத் திட்டமானது திறன்மிகு தொடர் பகுதியில் உள்ள சவால்களை எதிர்கொள்ளுவதற்காக சுவீடன் மற்றும் இந்தியாவின் உலகத் தரம் வாய்ந்த நிபுணத்துவத்தை ஒன்றிணைக்க இருக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்