நிதி ஆயோக் ஒருங்கிணைந்த நீர் மேலாண்மைக் குறியீட்டின் 2வது பதிப்பை வெளியிட்டுள்ளது.
இது நீர் வளங்களின் திறமையான மேலாண்மையில் மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்ய மற்றும் அவற்றை மேம்படுத்துவதற்கான ஒரு கருவியாகும்.
இந்த ஆய்வானது மத்திய ஜல் சக்தித் துறை அமைச்சகம், மத்திய கிராமப்புற வளர்ச்சித் துறை அமைச்சகம், அனைத்து மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இது போன்ற ஒரு முதல் குறியீடானது 2018 இல் வெளியிடப்பட்டது.
2019 ஆம் ஆண்டின் தரவரிசையில், 80% மாநிலங்கள் தங்களது நீர் மேலாண்மை மதிப்பீடுகளை மேம்படுத்தியுள்ளன என்று கண்டறியப்பட்டுள்ளது.
தரவரிசைகள்
தரவரிசைக்கான அடிப்படை ஆண்டு : 2017 – 2018
இந்தப் பட்டியலில் குஜராத் முதலிடத்தில் உள்ளது. இதற்கு அடுத்து இந்தப் பட்டியலில் ஆந்திரப் பிரசேதம், மத்தியப் பிரதேசம், கோவா, கர்நாடகா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் உள்ளன.
வட கிழக்கு மற்றும் இமயமலையில் உள்ள மாநிலங்களில் இமாச்சலப் பிரதேசம் முதலிடத்தில் தரவரிசைப் படுத்தப்பட்டுள்ளது. இதற்கு அடுத்து உத்தரகாண்ட், திரிபுரா மற்றும் அசாம் ஆகிய மாநிலங்கள் தரவரிசைப் படுத்தப்பட்டுள்ளன.