TNPSC Thervupettagam

ஒருங்கிணைந்த பிராந்திய மையம் - போர்ட் பிளேர்

January 30 , 2020 1918 days 819 0
  • மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சகமானது ஒருங்கிணைந்த பிராந்திய மையத்தைப் (Composite Regional Centre - CRC) போர்ட் பிளேரில் தொடங்கி உள்ளது.
  • இந்தியாவில் கோழிக்கோடு, போபால், லக்னோ, பாட்னா, குவஹாத்தி, ஸ்ரீநகர், அகமதாபாத், மண்டி மற்றும் சுராகி (சத்தீஸ்கர்) ஆகிய நகரங்களில் ஒருங்கிணைந்த பிராந்திய மையங்கள் அமைந்துள்ளன.
  • பார்வைக் குறைபாடு, மனநலம் குன்றியவர்கள், மதி இறுக்கம் ஆகியவற்றைக் கொண்ட மாற்றுத் திறனாளிகளுக்கு உள்கட்டமைப்பு மற்றும் வளங்கள் ஆகியவற்றை உருவாக்குவதற்காக CRCகள் தொடங்கப் பட்டுள்ளன.
  • இந்த மையங்கள் நகர்ப்புறங்களை விட உள்ளூர் மக்களின் மீது கவனத்தைச் செலுத்துகின்றன.
  • இந்த மையங்கள் மத்திய, மாவட்ட மற்றும் மாநில அளவில் புனர்வாழ்வு நிபுணர்களுக்குப் பயிற்சி அளித்தல் மற்றும் திறன் மேம்பாடு ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்