தேசியப் புலனாய்வு முகமை (NIA), 2025 ஆம் ஆண்டு தீவிரவாத எதிர்ப்பு மாநாட்டில் இந்தியா முழுவதும் ஒரே மாதிரியான தீவிரவாத எதிர்ப்புப் படை (ATS) அமைப்பின் அவசியத்தை எடுத்துரைத்தது.
ஒருங்கிணைப்பை மேம்படுத்துவதற்காக NIA ஒரு பொதுவான ATS கட்டமைப்பைத் தயாரித்து, அதை மாநிலக் காவல் படைகளுடன் பகிர்ந்து கொண்டுள்ளது.
புதுப்பிக்கப்பட்ட குற்றக் கையேடு, ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற வலையமைப்பு தரவுத் தளம் மற்றும் தொலைந்து போன மற்றும் மீட்கப்பட்ட ஆயுதங்கள் தரவுத் தளம் ஆகியவையும் NIA முகமையினால் தொடங்கப்பட்டன.
ஒரே சீரான ATS அமைப்பு அனைத்து மாநிலங்களிலும் நிலையான நடைமுறைகள், விரைவான எதிர் நடவடிக்கை மற்றும் சிறந்த விசாரணையை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் போன்ற கருவிகளைப் பயன்படுத்தித் தொழில்நுட்பம் சார்ந்ததாகவும், பிராந்திய ரீதியாகவும் மாறி வரும் நவீன தீவிரவாதத்தை இந்த முயற்சி நிவர்த்தி செய்கிறது.