‘ஒரே நாடு, ஒரே உரம்’ திட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்தப் புதிய திட்டமானது, ‘பாரத்’ என்ற ஒற்றைத் தயாரிப்பின் பெயரில் நாடு முழுவதும் உள்ள உரத் தயாரிப்புகளில் ஒரே சீரானத் தன்மையை கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
உர மானியத் திட்டத்தின் பெயரானது அதிகாரப்பூர்வமாக பிரதான் மந்திரி பாரதிய ஜானுர்வரக் பரி யோஜனா என மறுபெயரிடப்பட்டுள்ளது.
இனி பொதுத் துறையால் அல்லது தனியார் துறையால் உற்பத்தி செய்யப்பட்டதா என்பதைப் பொருட்படுத்தாமல் அனைத்து உரத் தயாரிப்புகளும், ‘பாரத்’ என்ற ஒரே தயாரிப்புப் பெயரைக் கொண்டிருக்க வேண்டும்.
பல்வேறு வகையான உரப் பொருட்கள், அதாவது, 'பாரத் யூரியா', 'பாரத் DAP', 'பாரத் MOP' மற்றும் 'பாரத் NPK' என்பது போன்ற பெயர்கள், பாரத் என்ற தயாரிப்புப் பெயரை மட்டுமே கொண்டிருக்க வேண்டும்.
பிரதான் மந்திரி பாரதிய ஜானுர்வரக் பரி யோஜனா திட்டத்தின் புதிய விதிகள் 2022 ஆம் ஆண்டு அக்டோபர் 02 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும்.