TNPSC Thervupettagam

ஒரே நாடு, ஒரே உரம் திட்டம்

August 7 , 2026 6 days 76 0
  • 'ஒரே நாடு, ஒரே உரம்' திட்டம் 2026 ஆம் ஆண்டின் காரீப் பருவத்தில் இந்தியா முழுவதும் உரம் கிடைப்பதையும் விநியோகத்தையும் மேம்படுத்தியுள்ளது.
  • இத்திட்டம் பிரதான் மந்திரி பாரதிய ஜன்உர்வரக் பரியோஜனாவின் (PMBJP) கீழ் 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 24 முதல் தொடங்கப்பட்டது, மேலும் அனைத்து உர நிறுவனங்களும் மானிய விலையிலான உரங்களை பொதுவான "பாரத்" பிராண்டின் / நிறுவன அடையாளத்தின் கீழ் விற்க வேண்டும்.
  • யூரியா, டை-அம்மோனியம் பாஸ்பேட் (DAP), மியூரியேட் ஆஃப் பொட்டாஷ் (MOP) மற்றும் NPKS (நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாசியம் மற்றும் சல்பர்) உரங்கள் உள்ளிட்ட மானிய விலையிலான உரங்கள் பாரத் பிராண்டின்/நிறுவன அடையாளத்தின் கீழ் சந்தைப்படுத்தப்படுகின்றன.
  • பல பிராண்டின்/நிறுவன அடையாளங்களால் விவசாயிகளிடையே ஏற்படும் குழப்பத்தை நீக்குதல், வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துதல், நியாயமற்ற நடைமுறைகளைக் குறைத்தல் மற்றும் மாநிலங்கள் முழுவதும் உரங்கள் சமமாக கிடைப்பதை உறுதி செய்தல் ஆகியவற்றை இத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • ஒருங்கிணைந்த உர மேலாண்மை அமைப்பின் (iFMS) மூலம் உர இயக்கம் கண்காணிக்கப் படுகிறது, இது விநியோகச் சங்கிலிகளைக் கண்காணிக்கும் மற்றும் நிகழ்நேர இருப்பை பராமரிக்க உதவும் இணைய அடிப்படையிலான தளமாகும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்