TNPSC Thervupettagam

ஒரே நாடு, ஒரே பணம் செலுத்துச் சீட்டு முன்னெடுப்பு

March 11 , 2023 898 days 585 0
  • குஜராத் அரசாங்கம் சமீபத்தில் ஒரே நாடு, ஒரே பணம் செலுத்துச் சீட்டு முன்னெடுப்பு என்பதினை நடைமுறைப் படுத்தியது.
  • ஒரே நாடு, ஒரே பணம் செலுத்துச் சீட்டு முன்னெடுப்பு என்பது சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகத்தின் ஒரு முன்னெடுப்பாகும்.
  • போக்குவரத்துக் காவல் மற்றும் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் (RTO) போன்ற அனைத்துப் போக்குவரத்து முறையுடன் தொடர்புடைய அனைத்து முகமைகளையும் ஒரே தளத்தில் கொண்டு வருவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இது தடையற்ற முறையிலான பணம் செலுத்துச் சீட்டு (அபராத ரசீது) சேகரிப்பு மற்றும் தரவுப் பரிமாற்றம் ஆகியவற்றிற்கு வழி வகுக்கும்.
  • தேசியத் தகவல் மையம் (NIC) ஆனது இதற்காக தனது செயலி ஒன்றினை அறிமுகப் படுத்த உள்ளது.
  • 90 நாட்களுக்குள் அபராத தொகையைச் செலுத்தவில்லை என்றால், அந்த அபராத ரசீது தானாகவே காணொளி வாயிலான இணைய நீதிமன்றத்திற்கு அனுப்பப்பட்டு, அதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்படும்.
  • காணொளி வாயிலான நீதிமன்றங்களானது, நீதிமன்றத்தில் அதிகளவில் குவியும் வழக்குகளின் எண்ணிக்கையினைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்