இந்தியக் குடியரசுத் தலைவர் புது தில்லியில் ஒல் சிக்கி எழுத்துமுறையின் கண்டு பிடிப்பின் 100 ஆண்டுகளைக் குறிக்கும் வகையில் அதன் நூற்றாண்டு விழாவைத் தொடங்கி வைத்தார்.
ஒடிசாவின் மயூர்பஞ்சைச் சேர்ந்த பண்டிட் ரகுநாத் முர்மு என்பவரால் 1925 ஆம் ஆண்டு ஒல் சிக்கி எழுத்து வடிவம் கண்டுபிடிக்கப்பட்டது.
சந்தாலி மொழிக்கு தனி எழுத்து வடிவத்தை வழங்குவதற்காக இது உருவாக்கப் பட்டது.
இந்த எழுத்து 30 எழுத்துக்களைக் கொண்டுள்ளது மற்றும் முற்றிலும் ஒலி வடிவ இயல்பு உடையது ஆகும்.
92வது அரசியலமைப்பு திருத்தச் சட்டம் 2003 மூலம் இந்திய அரசியலமைப்பின் எட்டாவது அட்டவணையில் சந்தாலி மொழி சேர்க்கப்பட்டது.
டிசம்பர் 2025 இல், இந்திய அரசியலமைப்பு ஒல் சிக்கி எழுத்துக்களைப் பயன்படுத்தி சந்தாலியில் மொழிபெயர்க்கப் பட்டது.