TNPSC Thervupettagam

ஒவ்வொரு மாவட்டத்திலும் சமஸ்கிருத மொழி பேசும் மக்களைக் கொண்ட கிராமம்

August 8 , 2022 1074 days 500 0
  • உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள 13 மாவட்டங்கள் ஒவ்வொன்றிலும், சமஸ்கிருத மொழி பேசும் மக்களைக் கொண்ட ஒரு கிராமத்தை உருவாக்க அந்த மாநில அரசு முடிவு செய்துள்ளது.
  • இந்தக் கிராமங்களில் வசிக்கும் குடிமக்களுக்கு, இந்தப் பழங்கால இந்திய மொழியை தினசரி தகவல் தொடர்பு ஊடகமாகப் பயன்படுத்துவதற்கு நிபுணர்களால் பயிற்சி அளிக்கப் படும்.
  • சமஸ்கிருத மொழியில் புலமை பெறுவதற்காக வேண்டி அவர்களுக்கு வேதங்கள் மற்றும் புராணங்கள் போன்றவை கற்பிக்கப்படும்.
  • பண்டைய இந்தியக் கலாச்சாரத்தின் மையமாக விளங்கும் இந்தக் கிராமங்கள் ஒவ்வொன்றும் "சமஸ்கிருத கிராமம்" என்று அழைக்கப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்