சென்னை, ஓமந்தூரார் அரசு வளாகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில், சென்னை மாகாணத்தின் முன்னாள் பிரதமரான (முதலமைச்சர்) ஓமந்தூர் ராமசாமி ரெட்டியாரின் சிலை நிறுவப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
அவர் 23 மார்ச் 1947 முதல் 6 ஏப்ரல் 1949 வரை சென்னை மாகாணத்தின் பிரதமராகப் பணியாற்றினார்.
ராமசாமி ரெட்டியார் வள்ளலாரின் தீவிர பக்தர் ஆவார்.
அவரது பதவிக் காலத்தில், 1947 ஆம் ஆண்டு சென்னை கோயில் நுழைவு அங்கீகாரச் சட்டம் நிறைவேற்றப்பட்டது.
இந்தச் சட்டம், தலித்துகள் மற்றும் பிற தடை செய்யப்பட்ட இந்துக்களுக்கு இந்து கோயில்களில் நுழைவதற்கான முழுமையான உரிமைகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டது.
1947 ஆம் ஆண்டு தேவதாசி முறை ஒழிப்புச் சட்டம், தேவதாசி முறைக்கு முற்றுப்புள்ளி வைத்தது.
அவரது பதவிக்காலத்தில் தான் இந்தியா ஐக்கியப் பேரரசிடம் இருந்து சுதந்திரம் பெற்றது.
1948 ஆம் ஆண்டில், சென்னை அரசாங்கத்திற்குச் சொந்தமான முதல் விமானமான 'டி ஹேவிலாந்து டோவ்' விமானத்தை வாங்குவதற்கு அவர் உத்தரவிட்டார்.
நாட்டில் முதன்முறையாக, அரசுப் பணிகளில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 14.29% இட ஒதுக்கீட்டை அவர் அறிமுகப்படுத்தினார்.
மேலும் அவரது பதவிக்காலத்தில் பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினருக்கு 29% இட ஒதுக்கீடும் வழங்கப்பட்டது.
விவசாயிகளுக்கு அதிகாரம் அளிப்பதை நோக்கமாகக் கொண்ட 1947 ஆம் ஆண்டு ஜமீன்தாரி ஒழிப்புச் சட்டத்தையும் அவர் மேற்பார்வையிட்டார்.