TNPSC Thervupettagam

ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் சிலை

February 3 , 2026 14 days 97 0
  • சென்னை, ஓமந்தூரார் அரசு வளாகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில், சென்னை மாகாணத்தின் முன்னாள் பிரதமரான (முதலமைச்சர்) ஓமந்தூர் ராமசாமி ரெட்டியாரின் சிலை நிறுவப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
  • அவர் 23 மார்ச் 1947 முதல் 6 ஏப்ரல் 1949 வரை சென்னை மாகாணத்தின் பிரதமராகப் பணியாற்றினார்.
  • ராமசாமி ரெட்டியார் வள்ளலாரின் தீவிர பக்தர் ஆவார்.
  • அவரது பதவிக் காலத்தில், 1947 ஆம் ஆண்டு சென்னை கோயில் நுழைவு அங்கீகாரச் சட்டம் நிறைவேற்றப்பட்டது.
  • இந்தச் சட்டம், தலித்துகள் மற்றும் பிற தடை செய்யப்பட்ட இந்துக்களுக்கு இந்து கோயில்களில் நுழைவதற்கான முழுமையான உரிமைகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டது.
  • 1947 ஆம் ஆண்டு தேவதாசி முறை ஒழிப்புச் சட்டம், தேவதாசி முறைக்கு முற்றுப்புள்ளி வைத்தது.
  • அவரது பதவிக்காலத்தில் தான் இந்தியா ஐக்கியப் பேரரசிடம் இருந்து சுதந்திரம் பெற்றது.
  • 1948 ஆம் ஆண்டில், சென்னை அரசாங்கத்திற்குச் சொந்தமான முதல் விமானமான 'டி ஹேவிலாந்து டோவ்' விமானத்தை வாங்குவதற்கு அவர் உத்தரவிட்டார்.
  • நாட்டில் முதன்முறையாக, அரசுப் பணிகளில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 14.29% இட ஒதுக்கீட்டை அவர் அறிமுகப்படுத்தினார்.
  • மேலும் அவரது பதவிக்காலத்தில் பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினருக்கு 29% இட ஒதுக்கீடும் வழங்கப்பட்டது.
  • விவசாயிகளுக்கு அதிகாரம் அளிப்பதை நோக்கமாகக் கொண்ட 1947 ஆம் ஆண்டு ஜமீன்தாரி ஒழிப்புச் சட்டத்தையும் அவர் மேற்பார்வையிட்டார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்