TNPSC Thervupettagam

ஓய்வு பெற்ற நீதிபதி M.S.ஜனார்த்தனம்

June 9 , 2025 19 hrs 0 min 29 0
  • ஓய்வு பெற்ற சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியும், மாநிலப் பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் முன்னாள் தலைவருமான நீதிபதி M.S. ஜனார்த்தனம் காலமானார்.
  • இவர் 1988 முதல் 1998 ஆம் ஆண்டு வரை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாகப் பணி ஆற்றினார்.
  • 2006 முதல் 2015 ஆம் ஆண்டு வரை மாநிலப் பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவராகவும் பணியாற்றினார்.
  • அவரது பரிந்துரைகளின் அடிப்படையில் மட்டுமே தான் தமிழ்நாட்டில் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் அருந்ததியர்களுக்கான இடஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டது.
  • 2010 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில், உச்ச நீதிமன்றம் ஆனது, BC, MBC மற்றும் SC/ST பிரிவினர்களுக்கான 69% இடஒதுக்கீட்டைத் தொடரச் செய்வதற்கான அளவிடக்கூடிய தரவுகளுடன் நியாயப்படுத்தலை வெளியிட என்று தமிழக அரசிற்கு ஓராண்டு கால அவகாசம் வழங்கியது.
  • மாநில BC ஆணையத்தின் தலைவராக இருந்த நீதிபதியான ஜனார்த்தனம், 1994 ஆம் ஆண்டின் தமிழ்நாடு சட்டம் 45ல் வழங்கப்பட்டுள்ளபடி, இட ஒதுக்கீட்டுத் திட்டத்தை ஆதரித்து ஓர் அறிக்கையை எழுதியிருந்தார்.
  • 2008 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில், ஒரு குழுவின் தலைவராக இருந்த அவர், இந்த மாநிலத்தின் கீழ் உள்ள குரூப் A, B மற்றும் C பணிகளில் அருந்ததியர்களின் பிரதிநிதித்துவம் "மிகவும் போதுமானதாக இல்லை" என்று அப்போதைய திமுக மாநில அரசாங்கத்திற்கு ஓர் அறிக்கையைச் சமர்ப்பித்தார்.
  • இதன் விளைவாக, மூன்று சதவீத இடஒதுக்கீடு நடைமுறைக்கு வந்தது.
  • 2012 ஆம் ஆண்டில், 20 சதவீத ஒதுக்கீட்டிற்குள் வன்னியர்களுக்கு என 10.5% உள் இட ஒதுக்கீடு வழங்குவதற்காக அவர் அரசாங்கத்திற்கு ஒரு கருத்தினை வழங்கினார்.
  • ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு முந்தைய அதிமுக ஆட்சியால் இது செயல்படுத்தப் பட்டாலும், 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் உச்ச நீதிமன்றம் இந்த நடவடிக்கையை ரத்து செய்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்