இந்திய அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதிய முறையை மேம்படுத்துவது குறித்து ஆய்வு மேற்கொள்வதற்காக ஒரு குழுவினை அமைக்க உள்ளதாக மத்திய அரசு அறிவித்து உள்ளது.
இந்த குழுவானது, நிதி ரீதியாக குறைவான செயல்திறன் கொண்ட பழைய ஓய்வூதிய முறைக்கும் சீர்திருத்தம் சார்ந்த புதிய தேசிய ஓய்வூதிய முறைக்கும் இடையில் ஒரு நடுநிலையைக் கண்டறிவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
குறைந்தபட்சம் ஐந்து எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களானது பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தத் தொடங்கியதனையடுத்து இந்த ஒரு நடவடிக்கையானது எடுக்கப் பட்டுள்ளது.
இந்தக் குழுவிற்கு நிதித்துறை செயலாளர் T .V. சோமநாதன் தலைமை தாங்க உள்ளார்.