TNPSC Thervupettagam

ஓய்வூதியர்கள் தினம் - டிசம்பர் 17

December 21 , 2024 134 days 131 0
  • 1982 ஆம் ஆண்டின் இதே நாளில் தான், ஓய்வு பெற்ற அதிகாரிகள் மற்றும் ஓய்வூதிய நபர்களுக்கான பேரு மதிப்பு மற்றும் கண்ணியத்தை உறுதி செய்யும் வகையில் உச்ச நீதிமன்றம் ஒரு முக்கிய தீர்ப்பை வழங்கியது.
  • இந்தச் சமூகத்திற்கு கண்ணியத்தையும் பெரு மதிப்பினையும் வழங்குவதற்காக பல ஆண்டுகளாகப் போராடிய மறைந்த D.S. நகரா அவர்களை நினைவு கூறும் விதமாக இத்தினம் அனுசரிக்கப்படுகிறது.
  • 1979 ஆம் ஆண்டில் மத்திய அரசினால் செயல்படுத்தப்பட்ட தாராளமய ஓய்வூதிய முறையானது ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு ஒப்பீட்டளவில் பயனுள்ளதாக இருந்தது.
  • இருப்பினும், இது 1979 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதிக்குப் பிறகு பணி ஓய்வு பெற்றவர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்று வரம்பு நிர்ணயிக்கப்பட்டது.
  • இந்தப் பாகுபாட்டினை எதிர்த்து D.S. நகரா நீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்தார்.
  • உரிமையியல் நிறுவனங்களுக்கான அரசு ஆணையமானது 1881 ஆம் ஆண்டில் முதன் முதலில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியப் பலன்களை வழங்கியது.
  • 1919 மற்றும் 1935 ஆம் ஆண்டுகளில் இயற்றப்பட்ட இந்திய அரசாங்கச் சட்டங்கள் மேற் கொண்ட விதிமுறைகளை உருவாக்கின.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்