மத்திய ஜல் சக்தித் துறை அமைச்சரான கஜேந்திர சிங் செகாவத் என்பவர் கங்கை நதியின் பங்குதாரர்களுடன் ஒருங்கிணைவதற்காக கங்கை அமந்திரன் அபியான் என்ற தனித்துவமான ஒரு முன்னெடுப்பைத் தொடங்கியுள்ளார்.
இது கங்கை நதியில் நடைபெறும் ஒரு முன்னோடியான திறந்தவெளி படகுப் பயணம் மற்றும் கயாக்கிங் (பனிக்கடற் படகு) பயணம் ஆகும்.
இந்தப் பயணமானது 25,000 கிலோமீட்டருக்கும் அதிகமான பரப்பளவைக் கொண்ட கங்கை நதியின் தேவப் பிரயாக் என்ற இடத்தில் தொடங்கி கங்கை சாகர் என்ற இடத்தில் முடிவடைய இருக்கின்றது.
கங்கை நதி முழுவதிலும் படகில் செல்வதற்காக தூய்மையான கங்கை நதிக்கான தேசியத் திட்டத்தினால் மேற்கொள்ளப்படும் முதலாவது முயற்சி இதுவாகும்.
இது நதிப் புத்துயிராக்கம் மற்றும் நீர்ப் பாதுகாப்பு குறித்த செய்தியை மிகப்பெரிய அளவில் பரப்புவதற்காக ஒரு சாகச விளையாட்டு நிகழ்வின் மூலம் மேற்கொள்ளப்பட்ட ஒரு மிக நீண்ட சமூகப் பிரச்சாரமாகும்.