TNPSC Thervupettagam

கடற்பசு வளங்காப்பகம் - IUCN

September 28 , 2025 2 days 32 0
  • அபுதாபியில் நடைபெற்ற 2025 ஆம் ஆண்டு IUCN உலகப் பாதுகாப்பு மாநாடு ஆனது இந்தியாவின் கடற்பசு வளங்காப்பகத்தினை அங்கீகரிக்கும் ஒரு தீர்மானத்தை ஏற்றுக் கொண்டது.
  • கடல்சார் வளங்காப்பை மேம்படுத்துவதற்கு இந்திய அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுடன் ஒத்துழைப்பினை மேற்கொள்வதற்கு IUCN வலியுறுத்தியது.
  • இந்தியாவின் முதல் கடற்பசு வளங்காப்பகம் தமிழ்நாட்டின் பாக் விரிகுடாவில் அமைந்துள்ளது.
  • இந்த வளங்காப்பகம் 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் 21 ஆம் தேதியன்று 1972 ஆம் ஆண்டு வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின கீழ் நிறுவப்பட்டது.
  • கடற்பசு வளங்காப்பகம் வடக்கு பாக் விரிகுடாவில் 448.34 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது.
  • இது கடற்பசுக்களுக்கு உணவளிக்கும் இடமாகச் செயல்படும் 12,250 ஹெக்டேர் பரப்பளவிலான கடல் புல்வெளிகளைப் பாதுகாக்கிறது.
  • கடற்பசுக்கள் (டுகோங் டுகோன்) ஆனது IUCN அமைப்பின் செந்நிறப் பட்டியலில் அருகும் அபாயத்தில் உள்ள இனங்களாகப் பட்டியலிடப்பட்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்