TNPSC Thervupettagam

கடற்படைத் தளபதிகள் மாநாடு 2025

November 8 , 2025 4 days 33 0
  • ஆண்டிற்கு இரண்டு முறை நடைபெறும் 2025 ஆம் ஆண்டிற்கான இரண்டாவது கடற்படைத் தளபதிகள் மாநாடானது புது டெல்லியின் நௌசேனா பவனில் நடைபெற்றது.
  • செயல்பாட்டுத் தயார்நிலை, கடல்சார் பாதுகாப்பு, திறன் மேம்பாடு மற்றும் முப்படை ஒருங்கிணைப்பு ஆகியவற்றில் இந்த மாநாடு கவனம் செலுத்தியது.
  • கடற்படை ஆயுதச் சேவைக்கான விதிமுறைகள், அரசாங்க இணையச் சந்தை (GeM) குறிப்பேடு மற்றும் வெளிநாட்டு ஒத்துழைப்புச் செயல் திட்டம் உட்பட ஐந்து கடற்படை அறிக்கை வெளியீடுகள் இதில் வெளியிடப்பட்டன.
  • கடற்படை ஆராய்ச்சி மற்றும் அறிவுசார் பணிகளின் தொகுப்பாக ஒருங்கிணைந்த அறிவுத் திறனுக்கான கடற்படை அறிவுசார் வலை தளமும் (NIPUN) தொடங்கப்பட்டது.
  • சாகர் மாந்தன் நிகழ்வு ஆனது சமகால கடல்சார் மற்றும் பாதுகாப்பு துறை பிரச்சினைகள் குறித்து விவாதித்தது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்