இந்தியா மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகள் தென்சீனக் கடலில் சமீபத்தில் ஒரு கடற்படைப் பயிற்சியை மேற்கொண்டன.
இந்தியக் கடற்படையானது ஐ.என்.எஸ். ரன்விஜய் என்ற ஏவுகணை தாக்குதல் கப்பலையும் ஐ.என்.எஸ். கோரா என்ற வழிகாட்டப்பட்ட ஏவுகணை போர்க் கப்பலையும் இப்பயிற்சியில் ஈடுபடுத்தியது.
பிலிப்பைன்ஸ் கடற்படையானது BRP அன்டோனியோ லூனா எனப்படும் ஒரு பீரங்கிக் கப்பலினை இப்பயிற்சியில் ஈடுபடுத்தியது.
குறிப்பு
தென்சீனக் கடலானது சீன இராணுவத்தின் வளர்ந்து வரும் விரிவாக்கத்தைச் சந்தித்து வருகிறது.