தமிழ்நாட்டின் முதல் கடல் ஆமை பாதுகாப்பு மையத்திற்கான அடிக்கல் சென்னையில் உள்ள கிண்டியில் நாட்டப்பட்டது.
உலக வங்கியின் உதவியுடன் செயல்படுத்தப்படும் தமிழ்நாடு நீடித்த பெருங்கடல் வளப் பயன்பாடு மற்றும் நீலப் பொருளாதாரம் (TN-SHORE) திட்டத்தின் கீழ், இந்த சிறப்பு மையம் ₹14.50 கோடி செலவில் நிறுவப்பட உள்ளது.
இந்த மையம் கடல் ஆமைப் பாதுகாப்புக்கான அறிவியல் ஆராய்ச்சி, கண்காணிப்பு, பயிற்சி மற்றும் ஒருங்கிணைப்பை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
உலகில் உள்ள ஆறு கடல் ஆமை இனங்களில் ஐந்து இனங்களைக் கொண்ட இந்தியாவின் ஒரே மாநிலம் தமிழ்நாடு ஆகும்.
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, நாகப்பட்டினம் மற்றும் கடலூர் பகுதியின் கடற்கரைகளில் ஒவ்வொரு ஆண்டும் அதிக அளவில் கடல் ஆமைகள் முட்டை இடுகின்றன.
இந்த முயற்சி கடல் ஆமைகளைப் பாதுகாப்பதில், குறிப்பாக அழிந்து வரும் சிற்றாமைகளை (ஆலிவ் ரிட்லி) பாதுகாப்பதில் கவனம் செலுத்துகிறது.