TNPSC Thervupettagam

கடல் சார் உணவுப் பாதுகாப்பு உச்சி மாநாடு

January 18 , 2026 4 days 51 0
  • இஸ்ரேலின் ஈலாட்டில் நடைபெற்ற "Blue Food Security: Sea the Future 2026" என்ற இரண்டாவது உலகளாவிய உச்சி மாநாட்டில் இந்தியா பங்கேற்றது.
  • இந்த உச்சி மாநாடு உணவுப் பாதுகாப்பு, நிலையான மீன்வளம் மற்றும் மீன்வளர்ப்பு சார் புத்தாக்கங்களில் கவனம் செலுத்தியது.
  • ஈலாட்டில் உள்ள தேசியக் கடல்சார் வளர்ப்பு மையம் (NCM), மீன் குஞ்சு வளர்ப்பு மேம்பாடு, குஞ்சு பொரிக்கும் தொழில்நுட்பங்கள் மற்றும் ஒருங்கிணைந்த பல் ஊட்ட மீன் வளர்ப்பை காட்சிப்படுத்தியது.
  • தொழில்நுட்ப பரிமாற்றம், நிலையான மீன்பிடி நடைமுறைகள், திறன் மேம்பாடு மற்றும் வர்த்தகம் உள்ளிட்ட மீன் வளம் மற்றும் மீன் வளர்ப்பில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான கூட்டு அமைச்சகப் பிரகடனத்தில் இந்தியாவும் இஸ்ரேலும் கையெழுத்திட்டன.
  • கடல் சார் உணவுப் பாதுகாப்பு துறையில் உலகளாவியத் தலைவர்கள், அறிவியல் ஆய்வாளர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்களின் பங்கேற்பும் இந்த உச்சி மாநாட்டில் இடம் பெற்றது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்