TNPSC Thervupettagam

கடல்சார் இந்தியா 2030–2047

November 7 , 2025 5 days 30 0
  • இந்தியாவின் வர்த்தகத்தில், அளவின் அடிப்படையில் சுமார் 95 சதவீதமும், மதிப்பின் அடிப்படையில் சுமார் 70 சதவீதமும் கடல்சார் வழிகளில் நடைபெறுகிறது.
  • கடல்சார் இந்தியக் கொள்கை 2030 (MIV 2030) ஆனது 3–3.5 லட்சம் கோடி ரூபாய் திட்டமிடப்பட்ட முதலீடுகளுடன் 150க்கும் மேற்பட்ட முன்னெடுப்புகளை உள்ளடக்கி உள்ளது.
  • முக்கியத் துறைமுகங்கள் 2024–25 ஆம் நிதியாண்டில் தோராயமாக 855 மில்லியன் டன் சரக்குகளைக் கையாண்டன என்ற நிலையில் இது 2023–24 ஆம் நிதியாண்டில் 819 மில்லியன் டன்களாக இருந்தது.
  • ஆண்டிற்கு 1,400 மில்லியன் மெட்ரிக் டன்களாக (MMTPA) இருந்த இந்தியாவின் துறைமுகச் செயல் திறன் ஆனது, மேம்படுத்தப் பட்ட திறன்களுடன் 2,762 MMTPA ஆக அதிகரித்து ள்ளது.
  • இந்திய உள்நாட்டு நீர்வழி ஆணையம் (IWAI) ஆனது, 2025 ஆம் ஆண்டில் சரக்குப் போக்குவரத்து 146 மில்லியன் மெட்ரிக் டன்னாக இருந்ததாக அறிவித்துள்ளது என்ற நிலையில் இது 2014 ஆம் ஆண்டில் 18 மில்லியன் மெட்ரிக் டன்னாக இருந்தது.
  • கடல்சார் அமிர்த கால் கொள்கை 2047 ஆனது துறைமுகங்கள், கடலோரக் கப்பல் போக்குவரத்து, உள்நாட்டு நீர்வழிகள் மற்றும் கப்பல் கட்டுமானத்தில் சுமார் 80 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகளைப் பெறத் திட்டமிடுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்