கடல்சார் துறையில் உள்ள பெண்களுக்கான சர்வதேச தினம் 2025 - மே 18
May 24 , 2025 20 days 47 0
இது கடல்சார் துறையில் பெண்களின் ஆட்சேர்ப்பு, தக்க வைப்பு மற்றும் நிலையான வேலைவாய்ப்பை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
கடல்சார் துறையில் பெண்கள் என்ற பதமானது கப்பல் போக்குவரத்து, துறைமுகச் செயல்பாடுகள் மற்றும் அதனுடன் தொடர்புடையத் தொழில்துறைகளின் அனைத்து அம்சங்களையும் குறிக்கிறது.
தற்போது, உலகளாவிய கடல்சார் பணியாளர்களில் 2% மட்டுமே பெண்கள் உள்ளனர் மற்றும் கடற்கரை சார்ந்த கடல்சார் பணியாளர்களில் சுமார் 20% மட்டுமே பெண்கள் உள்ளனர்.
2015 ஆம் ஆண்டில் 1,699 ஆக இருந்த இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட கடல்சார் பெண் பணியாளர்கள் 2024 ஆம் ஆண்டில் 14,255 ஆக அதிகரித்துள்ளனர்.
"Women in Maritime: Leading Transformation and Sustainability" என்ற ஒரு கருத்துருவின் கீழ் இந்தியா இந்த நாளைக் கொண்டாடியது.