TNPSC Thervupettagam

கடல்சார் தேடல் மற்றும் மீட்புக்கான சர்வதேச ஒப்பந்தம்

March 8 , 2026 2 days 35 0
  • இலங்கைக்கு அருகிலுள்ள இந்தியப் பெருங்கடலில் ஒரு அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் ஈரானிய போர்க்கப்பலான IRIS தேனாவை கடற்கணை மூலம் தாக்கியது.
  • 1979 ஆம் ஆண்டு கடல்சார் தேடல் மற்றும் மீட்புக்கான சர்வதேச ஒப்பந்தத்தின் (SAR) கீழ் இலங்கை மாலுமிகளை மீட்டது.
  • 1979 ஆம் ஆண்டு SAR (தேடல் மற்றும் மீட்பு) மாநாடு, கடலில் துன்பத்தில் உள்ள மக்களை மீட்பதை உறுதி செய்வதற்காக சர்வதேச கடல்சார் அமைப்பின் கீழ் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு சர்வதேச ஒப்பந்தமாகும்.
  • இது உலகின் பெருங்கடல்களை தேடல் மற்றும் மீட்புப் பகுதிகளாகப் பிரிப்பதுடன் அங்கு கடலோர நாடுகள் மீட்பு நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கின்றன.
  • கப்பல்கள் மற்றும் கடலோர நாடுகள் கடலில் துன்பத்தில் உள்ள மக்களுக்கு, எந்த நாட்டைச் சேர்ந்தவராக இருந்தாலும், உதவ வேண்டும் என்று இந்த ஒப்பந்தம் கோருகிறது.
  • இந்தியாவில், தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் இந்தியக் கடலோரக் காவல் படையால் ஒருங்கிணைக்கப்படுகின்றன.
  • இந்தியா 2001 இல் SAR ஒப்பந்தத்தை அங்கீகரித்து, இந்தியத் தேடல் மற்றும் மீட்புப் பகுதியில் (ISRR) மீட்பு நடவடிக்கைகளை நிர்வகிக்கிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்