TNPSC Thervupettagam

கடவுச்சீட்டு குடியுரிமைக்கான சான்றல்ல: வெளியுறவு அமைச்சகத்தின் விளக்கம்

June 27 , 2026 13 hrs 0 min 11 0
  • கடவுச்சீட்டு என்பது இந்தியக் குடியுரிமைக்கான சான்றல்ல என்று வெளியுறவு அமைச்சகம் (MEA) தெளிவுபடுத்தியுள்ளதுடன், தனது நீண்டகால சட்டப்பூர்வ நிலைப் பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
  • கடவுச்சீட்டு சட்டம், 1967ன் படி, கடவுச்சீட்டு என்பது ஒரு பயண ஆவணமாகவே வழங்கப் படுகிறதே தவிர, குடியுரிமைக்கான ஒரு உறுதியான சான்றாக அல்ல என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
  • இந்தச் சட்டம் பயண ஆவணங்களையும் இந்தியாவிலிருந்து வெளியேறுவதையும் ஒழுங்குபடுத்துவதால், குடியுரிமை நிலை திட்டவட்டமாக இல்லாத சில சந்தர்ப்பங்களில்கூட கடவுச்சீட்டுகளை வழங்க அனுமதிக்கிறது.
  • பம்பாய் உயர் நீதிமன்றம் (2013 தீர்ப்புகள்) உள்ளிட்ட நீதிமன்றங்கள், கடவுச்சீட்டை வைத்திருப்பதை குடியுரிமையின் இறுதிச் சான்றாகக் கருத முடியாது என்று தீர்ப்பு அளித்துள்ளன.
  • குடியுரிமையானது குடியுரிமைச் சட்டம், 1955-இன் கீழ் தனியாக நிர்வகிக்கப்படுகிறது; அதே நேரத்தில் ஆதார், வாக்காளர் அடையாள அட்டை (EPIC) மற்றும் குடும்ப அட்டை போன்ற அடையாள ஆவணங்களும் குடியுரிமைக்கான உறுதியான சான்றாகப் பயன்படாது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்