இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையமானது (FSSAI - Food Safety and Standards Authority of India) இதர சமையல் எண்ணெய்யுடன் கடுகு எண்ணெய்யைக் கலப்பதற்குத் தடை விதித்துள்ளது. இது 2020 ஆம் ஆண்டு அக்டோபர் 01 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
இதற்கு முன்பு, FSSAI-ன் விதிமுறைகளின் படி, 2 உண்ணத்தக்க எண்ணெய்களின் கலப்பானது அனுமதிக்கப்பட்டது.
கலப்புச் செயல்முறையில் பயன்படுத்தப்படும் எந்தவொரு உண்ணத்தக்க எண்ணெய்யின் எடை விகிதமானது 20 சதவீதத்திற்கும் குறையாமல் இருக்க வேண்டும் என்று இது எடுத்து உரைக்கிறது.