இந்திய தேர்தல் ஆணையமானது பீகாரின் லோக் ஜன்சக்தி கட்சியின் ‘பங்களா’ சின்னத்தினை முடக்கியுள்ளது.
தற்போது வரவிருக்கும் சட்டமன்ற இடைத் தேர்தலில் இந்தக் கட்சியின் இரு பிரிவினரும் இந்த சின்னத்தினைப் பயன்படுத்த இயலாது.
அதன் வழிகாட்டுதல்களின்படி,
ஒரு கட்சி/வேட்பாளர் வேட்பு மனுத் தாக்கல் செய்யும் போது தேர்தல் ஆணையத்தின் இலவச சின்னங்கள் பட்டியலில் இருந்து 3 சின்னங்களைத் தேர்ந்தெடுத்து அப்பட்டியலை வழங்க வேண்டும்.
அவற்றுள் முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் அந்தக் கட்சி/வேட்பாளருக்கு ஒரு சின்னம் ஒதுக்கப்படுகிறது.
அங்கீகரிக்கப்பட்ட ஒரு அரசியல் கட்சி உடையும் போது அதற்கான சின்னத்தை ஒதுக்குவது குறித்து தேர்தல் ஆணையம் முடிவெடுக்கும்.