TNPSC Thervupettagam

கட்டாய சிறு கடன் வசூலிப்பு

June 18 , 2025 17 days 59 0
  • மாநில அரசானது, தமிழ்நாடு 2025 ஆம் ஆண்டு கடன் வழங்கீட்டு நிறுவனங்கள் (கடும் கட்டாய நடவடிக்கைகளைத் தடுக்கும்) சட்டத்தினை அறிவித்துள்ளது.
  • இது கடன் வழங்கீட்டு நிறுவனங்கள் சிறு கடன்களை கட்டாயமாக வசூலிப்பதைத் தடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்தச் சட்டமானது ஏப்ரல் மாதத்தில் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, ஜூன் 09 ஆம் தேதியன்று ஆளுநரின் ஒப்புதலைப் பெற்றது.
  • இந்தச் சட்டமானது, நலிவடைந்த மற்றும் எளிதில் பாதிக்கப்படக்கூடிய குழுக்கள் மற்றும் தனிநபர்களை மிகக் குறிப்பாக விவசாயிகள், பெண்கள் மற்றும் சுய உதவிக் குழுக்களைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இது தமிழ்நாட்டில் செயல்படும் சிறு கடன் வழங்கீட்டு நிறுவனங்கள் மற்றும் கடன் வழங்கீட்டு நிறுவனங்கள் போன்ற கடன் வழங்கீட்டு நிறுவனங்கள் கடன்களைக் கட்டாயமாக வசூலிப்பதில் இருந்து பாதுகாப்பு வழங்குகிறது.
  • கடன் வாங்குபவருக்கு எதிரான கட்டாய/அராஜக வசூலிப்பு நடவடிக்கை தொடர்பான சட்டத்தின் விதிகள் ஆனது, இந்திய ரிசர்வ் வங்கியில் பதிவு செய்யப்பட்ட வங்கி சாரா நிதி நிறுவனங்கள் மற்றும் கூட்டுறவு வங்கிகள் மற்றும் சங்கங்களுக்குப் பொருந்தும்.
  • சிறுகடன் என்பது 3 லட்சம் வரையிலான ஆண்டு வருமானம் உள்ள ஒரு குடும்பத்திற்கு வழங்கப்படும் கடனைக் குறிக்கிறது.
  • ஒரு குடும்பம் என்பது கணவன், மனைவி மற்றும் அவர்களின் திருமணமாகாத மகன் மற்றும் மகள் ஆகியோரை உள்ளடக்கிய ஒரு தனிப்பட்ட குடும்ப அலகாகும்.
  • கடன் வாங்குபவர் என்பவர் ஒரு தனிநபர் அல்லது தனிநபர்களின் குழு அல்லது ஒரு சுய உதவிக் குழு அல்லது கூட்டுப் பொறுப்புக் குழுவைக் குறிக்கிறது.
  • இந்தச் சட்டத்தின் 20வது பிரிவானது, ஒரு கட்டாய வசூல் நடவடிக்கை எது என்பதையும் பட்டியலிடுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்