ஸ்டான்போர்ட் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் அரிய கண்ட கவச அடுக்கில் ஏற்பட்ட பூகம்பங்களின் முதல் உலகளாவிய வரைபடத்தை உருவாக்கினர்.
கவச அடுக்கில் நிகழும் பூகம்பங்கள் பூமியின் மேலோட்டில் இருந்து சுமார் 80 கிலோ மீட்டருக்கும் அதிகமான ஆழத்தில் நிகழ்கின்றன
1990 முதல் பதிவு செய்யப்பட்ட 46,000க்கும் மேற்பட்ட நிலநடுக்கங்களின் தரவுகளை ஆராய்ச்சியாளர்கள் பகுப்பாய்வு செய்து கண்ட கவச அடுக்கில் ஏற்பட்ட சுமார் 459 பூகம்பங்களை அடையாளம் கண்டனர்.
இந்த ஆழமான பூகம்பங்கள் முக்கியமாக இமயமலை மற்றும் பெரிங் நீர்ச்சந்திக்கு அடியில் காணப்பட்டன.
மேலோட்டில் நிகழும் நில நடுக்கங்களிலிருந்து கவச அடுக்கில் ஏற்பட்ட பல்வேறு நில நடுக்கங்களை வேறுபடுத்த விஞ்ஞானிகள் Sn மற்றும் Lg நில அதிர்வு அலைகளைப் பயன்படுத்தினர்.