குல்மார்க்கில் உள்ள இந்தியாவின் முதல் கண்ணாடி இக்லூ உணவகம் சுற்றுலாப் பயணிகளின் ஈர்ப்பினைப் பெற்ற பிரபலமான இடமாக மாறியுள்ளது.
வடக்கு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள குல்மார்க்கின் கோலாஹோய் கிரீன் ஹைட்ஸ் என்ற தங்கும் விடுதியினால் பனிக் குவியல்களின் நடுவில் இந்த கண்ணாடிச் சுவரினால் ஆன உணவகம் கட்டமைக்கப்பட்டுள்ளது.
2021 ஆம் ஆண்டில், இதே தங்கும் விடுதி நிர்வாகமானது, ஆசியாவின் மிகப்பெரிய பனி இக்லூ என்ற வகையில் குல்மார்க்கில் ஒரு பனி இக்லூவைக் கட்டமைத்தது.