TNPSC Thervupettagam

கனல் வாயு கந்தக நீக்கல் கொள்கை 2025

June 10 , 2025 5 days 32 0
  • இந்திய நிலக்கரிப் பயன்பாட்டு ஆலைகள் இனிமேல் கனல் வாயு கந்தக நீக்க (Flue Gas Desulphurization - FGD) அமைப்புகளை நிறுவ வேண்டும் என்ற ஆணையைத் திரும்பப் பெற முதன்மை அறிவியல் ஆலோசகர் அலுவலகம் பரிந்துரைத்துள்ளது.
  • சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் (MoEFCC) ஆனது, 2015 ஆம் ஆண்டில் இந்தியாவின் 537 நிலக்கரிப் பயன்பாட்டு ஆலைகள் அனைத்தும் சல்பர் டை ஆக்சைடு (SO2) மீதான உமிழ்வினைக் குறைக்க FGD அமைப்புகளை நிறுவ கட்டாயப்படுத்தியது.
  • நிலக்கரிப் பயன்பாட்டு மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து சல்பர் டை ஆக்சைடு (SO2) உமிழ்வினைக் குறைப்பதற்காக FGD அலகுகள் வடிவமைக்கப் பட்டுள்ளன.
  • இந்த அலகுகள் ஆனது, அனைத்து TPPகளிலும் காற்றின் தரத்தின் மீதான தரங்களைப் பூர்த்தி செய்வதற்காக நிறுவப்பட வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்பட்டுள்ளன.
  • இருப்பினும், இந்தியாவின் 600 TPPகளில் சுமார் 8% மட்டுமே இந்தத் தேவையைப் பூர்த்தி செய்துள்ளன.
  • மேலும், FGD அலகுகளைக் கொண்ட சில ஆலைகளுக்கு அதன் அருகிலுள்ள நகரங்கள், அவற்றைக் கொண்டிராதவற்றுடன் ஒப்பிடச் செய்யும் போது SO2 அளவுகளில் மிகவும் பெரிய அளவில் வேறுபாடுகளைக் கொண்டிருக்கவில்லை.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்