பாதுகாப்பான மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த கப்பல்களின் உடைப்பிற்கான ஹாங்காங் சர்வதேச ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்வதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
2009 ஆம் ஆண்டில் சீனாவின் ஹாங்காங்கில் நடைபெற்ற இராஜதந்திர மாநாட்டில் இந்த ஒப்பந்தம் முதன்முதலில் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
இது கப்பல்களின் பயன்பாடு (வாழ்நாள்) முடிவடைந்த பின்பு, மனித ஆரோக்கியம், பாதுகாப்பு மற்றும் சுற்றுச் சூழலுக்குத் தேவையற்ற ஆபத்துக்களை ஏற்படுத்தாமல் அவற்றை உடைப்பதை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
2018 ஆம் ஆண்டில், இந்தியா ஆண்டுதோறும் சுமார் ஐந்து மில்லியன் மொத்த டன் எடையுள்ள கப்பல் உடைத்தலை மேற்கொண்டுள்ளது. உலகின் கப்பல் உடைப்புத் துறையில் கிட்டத்தட்ட 25% பங்கை இந்தியா கொண்டுள்ளது.