TNPSC Thervupettagam

கப்பல் மறுசுழற்சியில் இந்தியா முதலிடம்

August 14 , 2026 4 days 65 0
  • கப்பல் மறுசுழற்சி செய்யும் உலகின் முன்னணி நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது, அதன் உலகளாவியப் பங்கை 2024 ஆம் ஆண்டில் 30.1% இலிருந்து 2025 ஆம் ஆண்டில் 35.4% ஆக உயர்த்தியுள்ளது.
  • இந்தியா 2025 ஆம் ஆண்டில் 2.99 மில்லியன் மொத்த டன் (GT) கப்பல்களை மறுசுழற்சி செய்தது, இது 2024 ஆம் ஆண்டில் 1.86 மில்லியன் GT-யை விட 60% அதிகமாகும்.
  • குஜராத்தில் உள்ள அலங்க்-சோசியா (Alang-Sosiya) தொகுதி இந்தியாவின் கப்பல் மறு சுழற்சியில் சுமார் 98% பங்கைக் கொண்டுள்ளது, இதன் ஆண்டுத் திறன் சுமார் 6 மில்லியன் GT ஆகும்.
  • கப்பல் மறுசுழற்சி சட்டம் 2019, கப்பல் மறுசுழற்சி விதிகள் 2021 மற்றும் கப்பல் மறுசுழற்சி விதிமுறைகள் 2026 ஆகியவை பாதுகாப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் ஒழுங்குமுறை இணக்கத்தை வலுப்படுத்துகின்றன.
  • 2025 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் நடைமுறைக்கு வந்த கப்பல்களின் பாதுகாப்பான மற்றும் சுற்றுச்சூழல் ரீதியான மறுசுழற்சிக்கான ஹாங்காங் சர்வதேச ஒப்பந்தத்துடன் இந்தியா தனது கட்டமைப்பை இணைத்துள்ளது.
  • இந்தியா மறுசுழற்சி திறனை சுமார் 9 மில்லியன் கப்பலின் காலி எடையை (டன்களில்) (LDT) அதிகரிக்க திட்டமிட்டுள்ளது மற்றும் முற்றங்களை நவீனமயமாக்குவதற்கு ₹53.5 கோடியை வழங்கியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்