TNPSC Thervupettagam

கரிபா ஏரியின் நீர் மட்டம்

April 21 , 2024 26 days 128 0
  • சமீபத்திய எல் நினோ வறட்சியின் காரணமாக ஜிம்பாப்வேயில் உள்ள கரிபா ஏரியின் நீர்மட்டம் வெகுவாகக் குறைந்துள்ளது.
  • ஏரியின் நீர் மட்டமானது அதன் கொள்ளளவில் வெறும் 13.52% ஆகக் குறைந்துள்ளது.
  • மழைக்கு ஏற்றவாறு அந்த ஏரியின் நீர்மட்டம் மாறுகிறது என்ற நிலையில் கடந்த ஆண்டு, ஏரி 21.94% நிரம்பியிருந்தது, ஆனால் 2015 ஆம் ஆண்டில் அந்த ஏரியின் நீர் மட்டம் 12% ஆகக் குறைந்திருந்தது.
  • 280 கிலோமீட்டர் நீளமுள்ள, மனிதனால் உருவாக்கப்பட்ட கரிபா ஏரி என்பது கரிபா அணையின் ஒரு பகுதியாகும்.
  • கரிபா ஏரி என்பது உலகின் மிகப்பெரிய, மனிதனால் உருவாக்கப்பட்ட ஏரி மற்றும் நீர்த் தேக்கம் ஆகும்.
  • இது 1955 மற்றும் 1959 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் ஜாம்பியா மற்றும் ஜிம்பாப்வே இடையே ஜாம்பேசி நதிப் படுகையில் கட்டமைக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்