சந்தையில் முன்னணியில் உள்ள நுகர்வோர் தயாரிப்பு நிறுவனங்களான கோகோ கோலா இந்தியா, பெப்சிகோ இந்தியா மற்றும் பிஸ்லெரி போன்ற நிறுவனங்கள் நாட்டில் இதே வகையைச் சேர்ந்த முதன்முறையாக பொதி கட்டுதலின் கழிவு மேலாண்மை என்ற ஒரு திட்டத்தைத் தொடங்கியுள்ளன.
இந்தத் திட்டம் கரோ சம்பவ் என்று அழைக்கப்படுகின்றது.
நுகர்வோர்கள் பொதியில் உள்ள பொருள்களைப் பயன்படுத்திய பின்னர் அந்த கழிவுப் பொதிகளைச் சேகரிப்பதற்கும் பொருள்களின் மறுசுழற்சி செயல்முறைகளை மேம்படுத்துவதற்கும் முறையான ஒரு சூழல் அமைப்பை உருவாக்குவதில் இது கவனம் செலுத்த இருக்கின்றது.
கரோ சம்பவ் என்பது ஒரு தயாரிப்பாளர் தலைமையிலான மற்றும் அந்தத் தயாரிப்பு நிறுவனங்களால் செயல்படுத்தப்படும் ஒரு திட்டமாகும். இது 2025 ஆம் ஆண்டிற்குள் மறுசுழற்சி செய்யக்கூடிய பொதிகளின் கழிவுப் பொருட்கள் நிலப்பரப்பில் கொட்டப்படாமல் இருப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
ஏறத்தாழ 90 சதவீத பாலி எத்திலீன் டெரிப்தாலேட் புட்டிகள் மறுசுழற்சி செய்யப்படுவதாகவும் 200 மில்லி லிட்டர் அளவுள்ள புட்டிகளைத் தடை செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அந்தக் குளிர்பானத் தயாரிப்பு நிறுவனங்கள் கூறுகின்றன.