TNPSC Thervupettagam

கர்நாடகா நல் உதவிபுரிபவர்களுக்கான பாதுகாப்பு மசோதா 2016

October 2 , 2018 2432 days 741 0
  • கர்நாடகா நல் உதவிபுரிபவர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்கள் (அவசர கால சூழ்நிலைகளில் பாதுகாப்பு மற்றும் நெறிமுறைகள்) மசோதா 2016-க்கு அரசியலமைப்பின் 200வது பிரிவின் கீழ் குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார்.
  • இதனால் கர்நாடகா மாநிலமானது, விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பொன்னான நேரத்திற்குள் அவசரகால மருத்துவ உதவி வழங்கும் நல் உதவிபுரிபவர்களுக்கு சட்டப்பூர்வமான பாதுகாப்பை வழங்கிய முதல் மாநிலமாக ஆகியுள்ளது.
  • பொன்னான நேரம் என்பது அதிர்ச்சிகரமான காயம்பட்டவருக்கு அவசரகால மருத்துவ உதவி தேவைப்படுகின்ற முதல் ஒரு மணி நேரத்தின் மருத்துவத் துறை சொல் ஆகும்.
  • இந்தச் சட்டத்தின் கீழ் கர்நாடக அரசானது உரிய நேரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் நல் உதவிபுரிபவர்களுக்கு நிதியுதவியை வழங்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்