கர்நாடகாவின் குவாண்டம் தொழில்நுட்ப நகரத்திற்கான வரைபடம்
December 2 , 2025 10 days 44 0
28வது பெங்களூரு தொழில்நுட்ப உச்சி மாநாட்டில் (2025) இந்தியாவின் முதல் குவாண்டம் தொழில்நுட்ப நகரத்திற்கான (Q-City) வரைபடத்தினை கர்நாடக மாநிலம் வெளியிட்டது.
சுமார் 1,000 கோடி ரூபாய் மதிப்பிலான குவாண்டம் திட்டத்தின் கீழ் கர்நாடகாவின் ஹெசரகட்டாவில் இந்தக் குவாண்டம் தொழில்நுட்ப நகரம் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் குவாண்டம் ஆராய்ச்சி, புதுமை மற்றும் வணிகமயமாக்கலை ஊக்குவிப்பதை குவாண்டம் தொழில்நுட்ப நகரம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இதில் ஆராய்ச்சி ஆய்வகங்கள், குவாண்டம் வன்பொருள் பூங்கா, கிரையோஜெனிக் சோதனை அலகுகள் மற்றும் குவாண்டம் மேகக் கணினி/தரவு மையங்கள் ஆகியவை அடங்கும்.
குவாண்டம் சில்லுகளின் உற்பத்திக்காக பெங்களூருவில் 1,136 கோடி ரூபாய் மதிப்பிலான குவாண்டம் மேம்பாட்டு மையத்தையும் கர்நாடகா அமைக்க உள்ளது.