பீகாரில் உள்ள ஐஐடி பாட்னாவின் அறிவியலாளர்கள், காந்தப்-பாய்மவியல் (MR) பாய்மங்கள் மற்றும் திறன்மிகு பொருள் தொழில்நுட்பங்கள் குறித்த ஆராய்ச்சியை மேம்படுத்துவதற்காக ஒரு கலப்பின காந்த-பாய்மவியல்மானியை உருவாக்கி உள்ளனர்.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் (DST) ஆதரவுடன் இந்தக் கருவி உருவாக்கப் பட்டது.
இது, ஒருங்கிணைந்த அமுக்கம் மற்றும் வெட்டு விசை நிலைகளின் கீழ் MR பாய்மங்களின் பாய்வு, உருக்குலைவு, உராய்வு மற்றும் தேய்மானப் பண்புகளை அளவிட முடியும்.
MR பாய்மங்கள் என்பவை, காந்தப்புலத்திற்கு உட்படுத்தப்படும் போது பாகுத் தன்மையை மாற்றிக்கொள்ளும் திறன்மிகு பொருட்கள் ஆகும். இவை பிரேக்குகள், கிளட்சுகள், அதிர்வு உறிஞ்சிகள், தணிப்பிகள், இயக்கிகள் மற்றும் மருத்துவக் கருவிகளில் பயன்படுத்தப்படுகின்றன.
இந்தத் தொழில்நுட்பம், சுகாதாரம், விண்வெளி, பாதுகாப்பு மற்றும் தொழில்துறை தன்னியக்கம் ஆகியவற்றில் மேம்பட்ட பயன்பாடுகளை வடிவமைக்க உதவுகிறது.