ஒரு தவணை கோவிட்சீல்ட் மற்றும் அதனைத் தொடர்ந்து ஒரு தவணை கோவாக்சின் செலுத்திக் கொள்ளுதல் பாதுகாப்பானது மற்றும் சிறப்பான நோய் எதிர்ப்புச் சக்தியை உருவாக்குகிறது.
இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இது தெரிவிக்கப் பட்டுள்ளது.
’இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தில் கோவிட் – 19 தடுப்பு மருந்து கலப்பு குறித்த சீரற்றத் தன்மை : பன்முகத்தன்மையின் பாதுகாப்பு மற்றும் நோய் எதிர்ப்புத் திறன் மதிப்பீடு‘ (Serendipitous Covid-19 Vaccine-Mix in Uttar Pradesh, India: Safety and Immunogenicity Assessment of a Heterologous Regime’) என்று தலையிடப்பட்ட ஒரு ஆய்வானது இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழக அறிவியலாளர் ரஜினிகாந்த் என்பவர் தலைமையில் மேற்கொள்ளப் பட்டது.