கலிபோர்னியாவில் ஒரு காலத்தில் பரந்த நன்னீர் பரப்பாக இருந்த துலாரே ஏரி, கடும் பனி உருகலின் காரணமாக 130 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தோன்றியுள்ளது.
துலாரே ஏரியானது 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், சுமார் 100 மைல்களுக்கு மேல் நீளமும் 30 மைல் அகலமும் கொண்டதாக இருந்தது.
இது மிசிசிப்பி ஆற்றின் மேற்கில் உள்ள மிகப்பெரிய நன்னீர் ஏரியாகும்.
இருப்பினும், 1800 ஆம் ஆண்டுகளின் பிற்பகுதியில், இந்த ஏரியானது வறண்டு போகத் தொடங்கியது.
குடியேறிகள் அந்த நிலத்தை வேளாண்மைக்குப் பயன்படுத்தினர் என்பதால், இந்த ஏரியிலிருந்து நீர் எடுப்பதற்கு நீர்ப்பாசனக் கால்வாய்கள் மற்றும் பிற அமைப்புகள் கட்டமைக்கப்பட்டன.
இந்த நடவடிக்கை துலாரே ஏரியை முழுவதுமாக வேளாண் நிலமாக மாற்றியது.
அதன் நீர் வேளாண்மைக்காகத் திருப்பி விடப்பட்ட பிறகு ஒரு நூற்றாண்டுக்கு முன்பு அது மறைந்து விட்டதால் இந்த ஏரியானது "பேய் ஏரி" என்ற ஒரு புனைப் பெயரைப் பெற்றது.