போட்ரியோகோகஸ் பிரவுனி எனப்படும் பச்சை ஆல்கா (பாசி) இனம் காரணமாக இஸ்ரேலில் உள்ள கலிலேயா கடல் சிவப்பு நிறமாக மாறியுள்ளது.
இந்த ஆல்கா சூரிய ஒளியில் ஒரு சிவப்பு நிறமியை உருவாக்குகிறது என்பதோடு இது தண்ணீரில் குவிந்து, நிற மாற்றத்தை ஏற்படுத்துகிறது.
பாசி பெருகும் நிகழ்வானது, அதிகரித்து வரும் உலகளாவிய வெப்பநிலை மற்றும் பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் ஊட்டச்சத்து குவிப்புடன் தொடர்புடையது.
இது மனிதர்களுக்குப் பாதிப்பில்லாதது என்றாலும், இந்தப் பாசிப் பெருகல் சூரிய ஒளியைத் தடுப்பதன் மூலமும் நீரில் ஆக்ஸிஜன் அளவைக் குறைப்பதன் மூலமும் நீர் வாழ் உயிரினங்களைத் தொந்தரவு செய்யலாம்.
நீரின் நிறம் சிவப்பாக மாறுகின்ற இதே போன்ற நிகழ்வுகள் 2022 ஆம் ஆண்டில் இஸ்ரேலின் சவக்கடல் பகுதியில், அதே ஆல்கா இனங்கள் காரணமாக ஏற்பட்டன.