TNPSC Thervupettagam

கல்வி குறித்த யுனெஸ்கோ அறிக்கை 2025

December 15 , 2025 3 days 55 0
  • யுனெஸ்கோ அமைப்பானது, "கல்வி உரிமை: கடந்த காலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலம்" என்ற அறிக்கையை வெளியிட்டது.
  • கல்வி உரிமைக்கான உலகளாவிய சட்டக் கட்டமைப்பை நவீனமயமாக்க வேண்டும் என்று அறிக்கை வலியுறுத்துகிறது.
  • பருவநிலை மாற்றம், மோதல்கள் மற்றும் விரைவான தொழில்நுட்ப மாற்றத்தால் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளை நிவர்த்தி செய்ய நவீனமயமாக்கல் தேவையாகும்.
  • கல்வியில் பாகுபாடு காட்டுவதற்கு எதிரான 1960 ஆம் ஆண்டு உடன்படிக்கையில் இருந்து, 2000 ஆம் ஆண்டில் 56% ஆக இருந்த இலவசத் தொடக்கப் பள்ளி சேவை பரவல் ஆனது இன்று 82% ஆக உயர்ந்துள்ளது.
  • பள்ளிப் படிப்பு நிறைவு விகிதம் 77 சதவீதத்திலிருந்து 88% ஆக உயர்ந்துள்ளது.
  • வளர்ச்சியடையாத நாடுகளில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியுடன், பள்ளிப்படிப்பில் பாலினச் சமத்துவ இலக்கு கிட்டத்தட்ட அடையப்பட்டுள்ளது என்பதோடு 2000 ஆம் ஆண்டில் 100 மில்லியன் மாணவர்களாக இருந்த உயர்கல்வி சேர்க்கையானது 264 மில்லியனாக அதிகரித்து உள்ளது.
  • முன்னேற்றம் இருந்த போதிலும், 272 மில்லியன் குழந்தைகள் முன்கூட்டியே பள்ளிப் படிப்பை விட்டு வெளியேறுகிறார்கள்.
  • 762 மில்லியன் வயது வந்தவர்கள் கல்வியறிவு இல்லாதவர்களாகவே உள்ளனர் (மூன்றில் இரண்டு பங்கு பெண்கள்) என்பதோடு மேலும் சில குறைந்த வருமானம் கொண்ட நாடுகளில், பத்து வயது குழந்தைகளில் 70% வரை ஓர் எளிய வாக்கியத்தை கூட படிக்க முடியாத நிலையில் உள்ளனர்.
  • பிரான்சு, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா மற்றும் மொராக்கோ போன்ற நாடுகள் தொழில் மற்றும் திறன் மேம்பாட்டுத் திட்டங்களை செயல்படுத்துவதால், வயது வந்தவர்கள் மற்றும் வயதான தொழிலாளர்களுக்கு வாழ்நாள் முழுவதும் கற்றல் அவசியமாகும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்