இந்திய சிறுதொழில் மேம்பாட்டு வங்கியானது, மேற்கு வங்கத்தில் உள்ள சுந்தர்பன் பகுதியில் வாழும் பெண்களுக்காக ‘கழிவிலிருந்து வளங்களை உருவாக்குதல்’ என்ற திட்டத்தைத் தொடங்கியுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் பெண்கள் மீன்களின் செதில்களிலிருந்து ஆபரணங்கள் மற்றும் காட்சிப் பொருட்களை செய்வர்.
இது இந்திய சிறுதொழில் மேம்பாட்டு வங்கியினால் தொடங்கப்பட்ட, கைவினைத் தொழில் நீடித்து நிலைப்பதற்கு, ஆதரவளிக்கும் ஒரு நோக்கம் கொண்ட ஸ்வலம்பன் (Swavalamban) என்ற திட்டத்தின் ஒரு பகுதியாகும்.