TNPSC Thervupettagam

கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களின் கசடுகளை உரமாகப் பயன்படுத்துதல்

May 14 , 2023 825 days 356 0
  • இந்தியக் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் (STP) ஆனது, பெரும்பாலான கசடுகளை உரமாகப் பயன்படுத்துவதற்கு "அதிக சாத்தியக் கூறுகள்" இருப்பதைக் கண்டறிந்து உள்ளன.
  • வேளாண் நிலங்களில் அவற்றைத் தடையின்றிப் பயன்படுத்துவதற்கு அல்லது மிக திறன்மிக்க உயிரி எரிபொருளாக அவற்றைப் பயன்படுத்துவதற்கு முன்பு அவற்றைச் சுத்திகரிப்பது அவசியமானதாகும்.
  • கங்கையில் இருந்து மாசுபட்ட நீரைச் சுத்திகரிப்பதற்காக அமைக்கப்பட்ட கழிவுநீர்ச் சுத்திகரிப்பு நிலையங்களில் காணப்படும் கசடு பற்றிய முதல் பகுப்பாய்வு மேற் கொள்ளப் பட்டது.
  • ரூர்க்கியின் இந்தியத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனமானது, அதைப் உலர்த்திய பிறகு பகுப்பாய்வு செய்யப்படும் பெரும்பாலான கசடுகள் B வகுப்பிற்குள் உள்ளடங்குவதாக கண்டறிந்துள்ளது.
  • இதில் உள்ள நைட்ரஜன் மற்றும் பாஸ்பரஸ் ஆகியவற்றின் அளவுகள், இந்தியாவின் உரத் தர நிர்ணய அமைப்புகளால் (உரக் கட்டுப்பாட்டு ஆணை, 2009) பரிந்துரைக்கப் பட்ட அளவை விட அதிகமாக உள்ளது.
  • இருப்பினும், சில கசடுகளில் உள்ள பொட்டாசியம் அளவானது பரிந்துரைக்கப்பட்டதை விட குறைவாக இருந்தது.
  • மொத்தக் கரிம கார்பன் அளவானது, உரக் கட்டுப்பாட்டு ஆணையின் பரிந்துரைகளை விட அதிகமாக உள்ள நிலையில், 16%க்கும் அதிகமாக இருந்தது.
  • ஆனால் நோய்க் கிருமிகளின் அளவு மற்றும் கன உலோக மாசுக் கலப்பு ஆகியவை பரிந்துரைக்கப்பட்ட உரத் தரத்தை விட அதிகமாக உள்ளன.
  • அமெரிக்கச் சுற்றுச்சூழல் பாதுகாப்பு முகமையின் தரநிலைகளின்படி, சுத்திகரிக்கப் பட்ட கசடுகளை A வகுப்பு அல்லது B வகுப்பு என வகைப்படுத்தலாம்.
  • A வகுப்பு கசடுகளை திறந்தவெளியில் அப்புறப் படுத்தப் படுவதற்குப் பாதுகாப்பானது மற்றும் கரிம உரமாகப் பயன்பட வல்லது.
  • B வகுப்பு கசடானது "வரையறுக்கப்பட்ட" வேளாண் பயன்பாடுகளில் மட்டுமே மிகவும் பயன்படுத்தக் கூடியது.
  • இந்தியாவில் கசடுகளை A அல்லது B வகுப்பு என வகைப்படுத்துவதற்கான தரநிலைகள் இன்னும் உருவாக்கப்படவில்லை.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்