நாட்டில் கால்நடைகளுக்குப் புதிய மருந்துகள் அறிமுகப் படுத்துதலானது கழுகுப் பாதுகாப்பு ஆர்வலர்களிடையே கடுமையான கவலையை ஏற்படுத்தி வருகின்றது.
இந்த மருந்துகளில் “ஃப்ளூனிக்சின்” என்ற மருந்து மிகவும் ஆபத்தான ஒன்றாகக் கருதப்படுகின்றது.
மொத்தக் கால்நடை மருந்துகளில் தற்பொழுது கண்டுபிடிக்கப்பட்ட புதிய மருந்தின் 1% அளவு மட்டுமே கழுகுகளின் சிறிய அளவிலான எண்ணிக்கையை எதிர்மறையாகப் பாதிக்கும்.
இதன் பயன்பாட்டை நிறுத்துமாறு தமிழக கால்நடை வளர்ப்பு அதிகாரிகளை ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
முன்னதாக “கெட்டோப்ரோஃபென்” என்ற மருந்து கொள்முதலானது நிறுத்தப்பட்டது. மேலும் கழுகுகளின் எண்ணிக்கையைக் காப்பாற்றுவதற்காக “டிக்ளோஃபெனாக்” என்ற மருந்தின் பயன்பாடும் குறைக்கப்பட்டது.