மக்களவையின் சபாநாயகரான ஓம் பிர்லா பாராளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஏழு உறுப்பினர்களை கீழவையிலிருந்துத் தற்காலிகமாக இடைநீக்கம் செய்துள்ளார்.
கௌரவ் கோகோய், டி.என். பிரதாபன், டீன் குரியகோஸ், ஆர். உன்னிதன், மாணிக்க தாகூர், பென்னி பெஹனன், மற்றும் குர்ஜீத் சிங் ஆஜ்லா ஆகியோர் எஞ்சி இருக்கும் நிதிநிலை அறிக்கை கூட்டத் தொடர் நிறைவடையும் வரை தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.
இவர்கள் சபை விதிகளைப் புறக்கணித்து சபாநாயகரின் மேசையிலிருந்த ஆவணங்களைப் பறித்ததன் காரணமாக மக்களவையானது இந்த தீர்மானத்தை நிறைவேற்றியது.