TNPSC Thervupettagam
April 6 , 2020 1946 days 672 0
  • குடிமைப் பணியாளர்கள் கூட்டமைப்பானது காருணா (CARUNA - Civil Services Associations Reach to Support Natural Disasters) என்ற ஒரு முன்னெடுப்பைத் தொடங்கி உள்ளது.
  • CARUNA என்பது “இயற்கைப் பேரிடர்களுக்கு ஆதரவளிக்க முன்வரும்  குடிமைப் பணியாளர்கள் கூட்டமைப்பு” என்பதாகும்.
  • CARUNA என்பது ஒரு கூட்டுத் தளமாகும். 
  • இது இந்திய ஆட்சிப் பணி மற்றும் இந்தியக் காவற் பணி அதிகாரிகள் ஆகியோரைக் கொண்டுள்ளது. 
  • இந்தத் தளமானது குடிமைப் பணியாளர்களுடன் அரசு சாரா அமைப்பு, தொழிற்துறைத் தலைவர்கள், தகவல் தொழில்நுட்ப நிபுணர்கள் ஆகியோரால் பிரதிநிதித்துவப் படுத்தப்படுகின்றது.
  • இந்த முன்னெடுப்பானது கரோனா நோய்த் தொற்றை எதிர்த்துப் போராடும் அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதற்காகத் தொடங்கப்பட்டு இருக்கின்றது.
  • இது இடப்பெயர்வு, மருத்துவ உபகரணங்கள், அத்தியாவசியப் பொருட்கள், செயற்கை சுவாசக் கருவிகள், கையுறைகள் ஆகியவை குறித்த ஒரு தகவல் தளத்தை உருவாக்க உதவுகின்றது. 
  • இந்த முன்னெடுப்பானது மாவட்ட அளவில் மேற்குறிப்பிட்டுள்ளவற்றில் உள்ள பற்றாக்குறைகளைக் களைய உதவ இருக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்