கார்கிலிலிருந்து கோஹிமா வரையிலான 4,500 கி.மீ தூரம் செல்லும் ‘கார்கிலில் இருந்து கோஹிமா (கே 2 கே): புகழ்பெற்ற ஓட்டம் ’ என்ற அல்ட்ரா மராத்தானை இந்திய விமானப்படையானது ஏற்பாடு செய்து வருகிறது.
இது ‘விஜய் திவாஸ்’ அல்லது ‘கார்கில் விஜய் திவாஸ்’ என்ற நடவடிக்கையின் (வெற்றிகரமாக நடத்தப்பட்ட விஜய் நடவடிக்கையின் பெயர்) 20ஆம் ஆண்டை நினைவுகூறுதலை நோக்கமாகக் கொண்டுள்ளது.
புதுடெல்லியில் வாயு பவனில் நடைபெற்ற விழாவில் விமானப்படை தலைமைத் தளபதியான B.S தனோவா இந்த மராத்தான் ஓட்டத்தை கொடியசைத்துத் துவக்கி வைத்தார்.
இந்த தனித்துவமான கார்கில் முதல் கோஹிமா வரையிலான அல்ட்ரா மாராத்தான் பயணமானது வரும் செப்டம்பர் 21 அன்று தொடங்கி நவம்பர் 6 ஆம் தேதி நிறைவடையும்.
இது ஜம்மு-காஷ்மீரில் உள்ள திராஸ் பகுதியில் உள்ள கார்கில் போர் நினைவுச் சின்னம் மற்றும் நாகாலாந்தின் கோஹிமாவில் உள்ள கோஹிமா போர் கல்லறை ஆகியவற்றிலிருந்துத் தொடங்கும்.